Friday, July 9, 2010

எல்லாம் பிடிக்கிறது . . . . .

.


இப்போதெல்லாம் எல்லாம் பிடிக்கறது . . . . .

மலர்களைப்  பிடிக்கறது எனக்கு,
அதன் வாசனைக்காக அல்ல ......
             - நீ சூடிக்கொள்வதால் !!!


தென்றலைப் பிடிக்கறது எனக்கு,
 அது ஜில்லென்று உரசி விளையாடுவதால் அல்ல . . . . .
           - உன்னைக் குளிர்விப்பதால் !!!


மழையைப் பிடிக்கிறது எனக்கு,
அது மக்களை வாழ வைப்பதால் அல்ல . . . . .
          - நீ நணைந்து விளையாடுவதால் !!!

மயிலைப் பிடிக்கிறது எனக்கு,
அதன் அழகிற்காக அல்ல . . . . .
          - அதன் தோகை உன் கூந்தலை போலிருப்பதால் !!!

நிலவைப் பிடிக்கிறது எனக்கு,
கவிஞன் வர்ணிப்பதால் அல்ல . . . . .
           - நான் அதில் உன் முகம் காண்பதால்  !!!


வாழப் பிடிக்கறது எனக்கு,
எனக்காக அல்ல . . . . .
           - நீ எனக்காக வாழ்கிறாய் என்பதற்காக !!!!!


with Dreams . . .
- Siva

No comments: